Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடர்: முதல் வெற்றியை பதிவு செய்த தில்லி அணி

Webdunia
ஞாயிறு, 27 மார்ச் 2022 (20:07 IST)
இன்று நடைபெற்ற மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தில்லி அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.
 
இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து மும்பை அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷான் மிக அபாரமாக விளையாடி 81 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.  20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்தது மும்பை அணி.
 
கேப்டன் ரோகித் சர்மா 41 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் கலீல் அஹமது 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர்.
 
இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தில்லி அணி 32 ரன்கள் எடுத்த நிலையில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.ஆனாலும் பிருத்வி ஷா, 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அணியை வெற்றியை நோக்கி எடுத்துச் சென்றார். இவருடன் ஷர்துல் தாகூர் 22 ரன்ளும் எடுத்திருந்தனர். பின்னர் வந்த  லலித் யாதவ் 48 ரன்களும், அக்சர் படேல் 38 ரன்களும் எடுத்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். முடிவில்  6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து தில்லி அணி வெற்றியை ருசித்தது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments