Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுரேஷ் ரெய்னாவை கைவிட்ட சிஎஸ்கே!

சுரேஷ் ரெய்னாவை கைவிட்ட சிஎஸ்கே!
, சனி, 12 பிப்ரவரி 2022 (14:22 IST)
நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலம் வாங்க முன் வராததால் சிஎஸ்கே ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

 
இந்தியன் ப்ரீமியர் லீக் டி 20 போட்டிகள் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கவனிக்கப்படும் போட்டி தொடராக உள்ளது. கடந்த ஆண்டு வரை ஐபிஎல்லில் 8 அணிகள் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு புதிதாக 2 அணிகள் சேர்த்து மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளன.
 
உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ள ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசன், மார்ச் இறுதி வாரத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய அணி வீரரும், முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ராபின் உத்தப்பாவை, அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கே சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் எடுத்து தக்க வைத்துள்ளது. 
 
இதேபோல் மேற்கு இந்திய வீரரான பிராவோவையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.4.40 கோடிக்கு தக்கவைத்துள்ளது. அதேநேரத்தில் சின்ன தல என்று அழைக்கப்படும் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை என்பது ரெய்னா ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னணி வீரர்கள் ஏலம் முடிந்தது: யார் யார் எந்த அணியில்?