Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல் மிட் ட்ரான்ஸ்பர் முறை – அணியில் சேர்க்கப்படாத வீரர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையுமா?

ஐபிஎல் மிட் ட்ரான்ஸ்பர் முறை – அணியில் சேர்க்கப்படாத வீரர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையுமா?
, வெள்ளி, 9 அக்டோபர் 2020 (19:12 IST)
ஐபிஎல் தொடரில் இரு அணிகளுக்கு இடையே வீரர்களை மாற்றிக்கொள்ளும் மிட் ட்ரான்ஸ்பர் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் அணிகளில் விளையாடாமல் வெளியே உடகார வைக்கப்பட்டு வீரர்கள் ஐபிஎல் தொடர் பாதி கட்டத்தை தாண்டியதும் அணிகளுக்குள் மாற்றிக்கொள்ளப்படலாம் என்ற முறை கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஆனால் பெரிதாக எந்த அணிகளும் அதுபோல வீரர்களை மாற்றிக்கொள்ளவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டாவது அதுபோன்ற வீரர்களை அணிகள் மாற்றிக்கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த மாற்று முறைக்கு ஏதுவாக மும்பை இந்தியன்ஸ் அணியில் 13 வீரர்கள் உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 9 வீரர்களும், டெல்லி அணியில் 11 வீரர்களும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் 13 பேர் உள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 10 பேர் உள்ளனர். ராஜஸ்தான் அணியில் 12 பேர் உள்ளனர். ஆர்சிபி அணியில் 10 பேர் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெற்றியின் உச்சத்தில் டெல்லி, திணறும் ராஜஸ்தான்! – இன்றைய போட்டியில் வெல்வது யார்?