Publish Date: Wed, 28 Oct 2020 (16:15 IST)
Updated Date: Wed, 28 Oct 2020 (16:17 IST)
சில நாட்களுக்கு முன்னர் சேவாக் ஹைதராபாத் அணியில் ஏன் விருத்திமான் சஹாவை இறக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் ஒவ்வொரு ஐபிஎல் போட்டிக்குப் பின்னரும் viru ki baithak என்ற நிகழ்ச்சியில் தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் அலசல் விமர்சனம் செய்துவருகிறார். சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டிக்குப் பின்னர் அவர் மும்பை அணியின் பேட்ஸ்மேன்களான ரோஹித் ஷர்மா மற்றும் சவுரவ் திவாரி ஆகியோரை வடா பாவ் மற்றும் சமோசா பாவ் எனக் கேலி செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த விருத்திமான் சஹா சிறப்பான பேட்டிங்கை மேற்கொண்டார். அவர் இந்த சீசனில் இறங்கிய முதல் போட்டி அதுதான். இந்நிலையில் போட்டிக்கு பின்னர் பேசிய சேவாக் ‘நான் சில நாட்களுக்கு முன்னர்தான் அனுபவமும் திறமையும் வாய்ந்த சஹாவை ஏன் இறக்கக் கூடாது எனக் கேட்டிருந்தேன். அது லஷ்மனுக்கு கேட்டுவிட்டது போல’ எனக் கூறியுள்ளார்.