யாருமே தோற்க விரும்புவதில்லை…. எல்லோரும் வெற்றியாளராக ஆவதில்லை – தோனி மனைவி தத்துவப் பதிவு!

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (17:57 IST)
சிஎஸ்கே அணியின் மோசமான தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் தோனியின் மனைவி சாக்‌ஷி பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்கு ஐபிஎல் தொடர் மிக மோசமாக அமைந்துள்ளது. தொடரில் இருந்து வெளியேறும் முதல் அணியாக சிஎஸ்கே உள்ளது. இந்த தோல்வியால் சிஎஸ்கே அணியின் கேப்டன் மற்றும் வீரர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தோனியின் மனைவி சாக்‌ஷி தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘விளையாட்டில் ஒரு நாள் நீங்கள் வெல்வீர்கள், இன்னொரு நாள் தோற்பீர்கள்.  இத்தனை ஆண்டுகளில் நிறைய வெற்றிகளும் சில வேதனையான தோல்விகளும் சாட்சிகளாக உள்ளன. அதில் வெற்றியைக் கொண்டாடுகிறோம். தோல்விகளால் மனம் உடைந்து போகிறோம். யாரும் தோற்க விரும்புவதில்லை. அனைவராலும் வெற்றியாளர்களாக முடியாது. உண்மையான போராளிகள் போராடப் பிறக்கிறார்கள். நம் மனத்தில் அவர்கள் எப்போதும் சூப்பர் கிங்ஸ்களாக இருப்பார்கள்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க்..!

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments