Publish Date: Thu, 12 Nov 2020 (20:24 IST)
Updated Date: Thu, 12 Nov 2020 (21:09 IST)
பஞ்சாப் அணியில் இருந்து மேக்ஸ்வெல் மற்றும் காட்ரெல் ஆகிய இருவரும் கழட்டி விடப்பட போவதாக சொல்லப்படுகிறது.
ஐபிஎல் தொடரை மோசமாக தொடங்கிய அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் இரண்டாவது பாதியில் தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆப்க்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி இரண்டு போட்டிகளை தோற்றதால் பிளே ஆஃப் கனவு உண்மையிலேயே கனவானது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு அணியை மெருகேற்றும் விதமாக அந்த அணியில் இருந்து மோசமாக விளையாடிய காட்ரெல் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் ஆகிய இருவரையும் கழட்டிவிட போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.