Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் பந்துவீச்சை புரட்டி எடுத்த கொல்கத்தா! 219 ரன்கள் இலக்கு

Webdunia
புதன், 27 மார்ச் 2019 (22:12 IST)
ஐபிஎல் 2019 கிரிக்கெட் தொடர் போட்டியின் 6வது போட்டி இன்று கொல்கத்தாவில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் களமிறங்கிய கொல்கத்தா, பஞ்சாப் பந்துவீச்சாளர்களின் பந்துகளை துவம்சம் செய்தது. ராபின் உத்தப்பா 67 ரன்களும், ரானா 63 ரன்களும், ருசல் 48 ரன்களும் அதிரடியாக குவித்ததால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 218 ரன்களை குவித்தனர்.
 
பஞ்சாப் பந்துவீச்சாளர்களான அஸ்வின் 4 ஓவர்களில் 47 ரன்களும், முகமது ஷமி 4 ஓவர்களில் 44 ரன்களும், கொடுத்து மோசமான பந்துவீச்சை பதிவு செய்தனர்
 
இந்த நிலையில் 219 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் பஞ்சாப் அணி சற்றுமுன் வரை 3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 25 ரன்கள் எடுத்துள்ளனர். தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு தாமதம்… ரசிகர்கள் புலம்பல்!

ரஞ்சிக் கோப்பை தொடரில் கோலி விளையாட மாட்டார்… வெளியான தகவல்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியை இன்று அறிவிக்கவுள்ள அகார்கர் & ரோஹித் ஷர்மா!

ரஞ்சி போட்டியில் கேப்டன் பொறுப்பை ஏற்க மறுத்த ரிஷப் பண்ட்… இதுதான் காரணமாம்!

சமாஜ்வாதி எம்பியை திருமணம் செய்கிறார் ரிங்கு சிங்: எளிமையாக நடந்த நிச்சயதார்த்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments