Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே.எல்.ராகுல் அபார சதம்: மும்பைக்கு 198 ரன்கள் இலக்கு

Webdunia
புதன், 10 ஏப்ரல் 2019 (22:05 IST)
மும்பையில் இன்று நடைபெற்று வரும் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 197 ரன்கள் எடுத்துள்ளது. 
 
கே.எல்.ராகுல் அபாரமாக விளையாடி சதமடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய கிறிஸ் கெயில் 36 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து அசத்தினார். இதில் 7 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும் இருப்பினும் கெயிலுக்கு பின்னால் வந்த் மில்லர், கே.கே.நாயர், கர்ரன் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே எடுத்து தங்கள் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்,
 
மும்பை அணியின் பந்துவீச்சாளரான ஹிருத்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். பும்ரா மற்றும் பெஹண்ட்ராப் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இன்னும் சற்று நேரத்தில் 198 என்ற இலக்கை நோக்கி மும்பை அணியினர் விளையடவுள்ளனர். ரோஹித் சர்மா இல்லாத மும்பை அணி இந்த இலக்கை எட்டுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித்திடம் இருந்த தகுதிகள் கில்லிடம் உள்ளன… அவர் அணியை வழிநடத்தத் தயார்- இந்திய வீரர் பாராட்டு!

டி20 போட்டியில் 257 ரன்கள் எடுத்த மே.இ.தீவுகள்.. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிய அயர்லாந்து..!

இனி மூவர் கூட்டணியை வெற்றிக் கூட்டணி என சொல்ல முடியாது- ஜான்சன் கருத்து!

பியர் இருக்கிறது வா என்றார்… சென்றுவிட்டேன்… வெற்றிக் கொண்டாட்டம் குறித்து எய்டன் மார்க்ரம்!

இங்கிலாந்து தொடருக்கு என் பெயர் வேண்டாம்… பிசிசிஐக்கு சச்சின் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments