ஐதராபாத்துக்கு 160 ரன்கள் இலக்கு: தொடர் தோல்வியை தவிர்க்குமா கொல்கத்தா?

Webdunia
ஞாயிறு, 21 ஏப்ரல் 2019 (17:56 IST)
ஐபிஎல் தொடரின் 38வது போட்டியான இன்று ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதி வருகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் கொல்கத்தா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் லின் பொறுப்புடன் விளையாடினாலும் அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் விழுந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஸல் கூட இன்று 15 ரன்களில் அவுட் ஆனதால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 
 
லின் 51 ரன்களும், ரிங்குசிங் 30 ரன்களும், சுனில் நரேன் 25 ரன்களும், ரஸல் 15 ரன்களும், ரானா 11 ரன்களும் எடுத்தனர். ஐதராபாத் அணியின் கே.கே.அஹ்மது மூன்று விக்கெட்டுக்களையும் புவனேஷ்குமார் இரண்டு விக்கெட்டுக்களையும், சந்தீப் ஷர்மா மற்றும் ரஷித் கான் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
 
இந்த நிலையில் ஐதராபாத் அணி 160 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்யவுள்ளது. அந்த அணியில் வார்னர், பெயர்ஸ்டோ, வில்லியம்சன், விஜய்சங்கர், யூசுப்பதான், ஹூடா ஆகிய பேட்ஸ்மேன்கள் நல்ல பார்மில் இருப்பதால் இந்த எளிய இலக்கை எட்டுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

RCB அணியை வாங்குகிறதா காந்தாரா தயாரிப்பு நிறுவனம்?

அடுத்த கட்டுரையில்
Show comments