என்னை மன்னித்துவிடுங்கள்: வெளியான கோலி வீடியோ!

Webdunia
வியாழன், 24 மே 2018 (18:58 IST)
ஐபிஎல் டி20 போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தை அடுத்து தற்போது ப்ளே ஆஃப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. சென்னை அணி நேரடியாக இறுதி போட்டிக்கு சென்றுள்ளது. 
 
நாளை கொல்கத்தா மற்றும் ஹைத்ராபாத் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி சென்னையும் இறுதி போட்டியில் மோதும். ஆனால், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமலே போட்டியில் இருந்து வெளியேறியது. 
 
அணியின் தோல்விக்கு பின் எந்த வித கருத்தும் தெரிவிக்காமல் கேப்டன் விராட் கோலி தர்போது தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு, 
 
எங்களால் நினைத்த அளவுக்கு 11 வது ஐபிஎல் சீசன் போட்டியில் சிறப்பாக விளையாட முடியவில்லை. இந்த சீசன் மிகச் சிறப்பாகச் சென்றது என்று கூறும் அளவுக்கு நாங்கள் பெருமைப்படவில்லை. 
 
நாங்கள் விளையாடிய விதம் என்னை மிகவும் வேதனைப்படுத்தியது, காயப்படுத்தி இருக்கிறது. ஆர்சிபி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப எங்களால் விளையாட முடியாததை நினைத்து வேதனைப்படுகிறேன். ரசிகர்களிடம் ஆழ்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

ஒரே நாளில் அதிக விக்கெட்கள்… ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நீதி.. இந்தியாவுக்கு ஒரு நீதி- அஸ்வின் காட்டம்!

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments