Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது: கோலி நம்பிக்கை

Webdunia
வியாழன், 5 ஏப்ரல் 2018 (13:20 IST)
பெங்களுர் அணியில்  பேட்டிங்கும், பவுலிங்கும் சிறப்பாக உள்ளதால்  எங்கள் அணி ஐபிஎல் தொடரில் கோப்பயை வெல்லும் என கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 11-வது சீசன் வரும் 7-ம் தேதி தொடங்கி மே 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோலி தலைமையில் களமிறங்கவுள்ளது.
 
இந்த நிலையில் ஐபிஎல் தொடர் குறித்து பெங்களூர் கேப்டன் கோலி கூறியிருப்பதாவது:-
 
” ரசிகர்களைவிட கோப்பையை வெல்ல நான் ஆர்வமாக உள்ளேன். கடந்த 10 ஆண்டுகளாக பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறேன். நாங்கள் 3 முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தும் கோப்பையை வெல்லவில்லை. இந்த முறை  100 சதவீதம்  எனது பங்களிப்பை அளிப்பேன் என்றார்.
 
மேலும்,  இந்த முறை அணியில் பேட்டிங்கும், பவுலிங்கும் சிறப்பாக உள்ளதால்  எங்கள் அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது ” என்று  கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரஸல் ஓய்வு.. ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா?

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி… ஆமை வேகத்தில் செயல்பட்ட இங்கிலாந்து அணிக்கு அபராதம்!

தீப்தி ஷர்மா அபார ஆட்டம்.. இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி..!

ஜடேஜா நல்லாதான் விளையாண்டார்…. ஆனாலும்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments