Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோப்பை யாருக்கு..? சென்னை - ஐதராபாத் நாளை மோதல்

Webdunia
சனி, 26 மே 2018 (11:04 IST)
ஐபிஎல் 11-வது சீசன் டி20 தொடரின் இறுதிப்போட்டி நாளை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
 
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கும் இடையேயான இறுதிப்போட்டி நாளை 7 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளனர்.
 
இந்த சீசனில் கடைசி 4 ஆட்டங்களிலும் தோல்வியை அடைந்திருந்த ஐதராபாத் அணி, நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தியதன் மூலம் உற்சாகத்தில் உள்ளனர்.
 
முந்தைய 3 போட்டிகளில் சென்னையிடம் பெற்ற தோல்விக்கு இறுதி போட்டியில் பதிலடி கொடுத்து கோப்பையை கைப்பற்ற ஐதராபாத் அணி தீவிரமாக உள்ளது. அதேபோல், சென்னை அணி முந்தைய போட்டிகளில் ஐதராபாத் அணியை வீழ்த்தியதை போல இறுதிப்போட்டியிலும் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் சென்னை அணி உள்ளது.
 
சென்னை அணி இதுவரை 6 முறை இறுதி போட்டிக்கு தகுதிப்பெற்று 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஐதராபத் அணி இதுவரை 1 முறை இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்று அந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments