Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பந்துவீச்சாளர்கள் ஏமாற்றத்தை அளித்தனர்: தோனி வருத்தம்!

Webdunia
வெள்ளி, 4 மே 2018 (16:53 IST)
கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொலகத்தா அணியிடம் தோல்வி அடைந்தனர். 
 
இது குறித்து தோனி கூறியதாவது, ஓட்டு மொத்தமாக இந்த தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது. குறிப்பாக பந்து வீச்சு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. 
 
எந்த பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசவில்லை. இதனால் கடைசி வரை பவுலர்களை மாற்றி கொண்டே இருந்தேன். அவர்கள் தங்களது வேகம் மற்றும் சரியான திசைகளில் வீசுவதில் மாற்றம் கொண்டு வர வேண்டும். 
 
பேட்ஸ்மேன்களின் பலம் பற்றி பந்து வீச்சாளர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் நெருக்கடிதான் ஏற்படும். பேட்ஸ்மேன்கள் பலம் அறிந்து பந்து வீச வேண்டும். 
 
நாங்கள் எப்போதும் எப்படி பீல்டிங் செய்வோம் என்பதை அறிவேன். ஆனால், இப்போட்டியில் பீல்டிங் மோசமாக இருந்தது. பீல்டிங்கில் ரன்களை கொடுத்தால் நீங்கள் மெதுவாக செயல்படுகிறீர்கள் என்று அர்த்தம். இந்த தவறுகள் தவிர்க்கப்படும் என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

மிடில் ஆர்டரை பலப்படுத்த நான் மூன்றாவதாக இறங்கினேன்… ஆனால்?- தொடக்க வீரர்களை நொந்த ருத்துராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments