Publish Date: Tue, 09 May 2017 (21:50 IST)
Updated Date: Tue, 09 May 2017 (21:53 IST)
தென் ஆப்பரிக்க வீரர்கள் நாடு திரும்பியதை அடுத்து பஞ்சாப் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஆம்லா இல்லாமல் பஞ்சாப் அணி பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது.
ஐபிஎல் 10வது சீசன் இன்றைய போட்டியில் பஞ்சாப் - கொல்கத்தா ஆகிய ஆணிகள் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்துள்ளது.
இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாட தயாராகி வருகிறது. தென் ஆப்பரிக்க வீரர்கள் நாடு திரும்பியதை அடுத்து பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஆம்லா இல்லாமல் பஞ்சாப் தொடகத்தில் விரைவில் விக்கெட்டை பறிகொடுத்தது.