தேவையானவை
பச்சரிசி - 1 ஆழாக்கு
உளுந்தம் பருப்பு - கால் ஆழாக்கு
புழுங்கலரிசி - கால் ஆழாக்கு
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயம், உப்பு, கடலை எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்யும் முறை
அரிசி இரண்டையும் ஒன்றாக ஊற வைக்கவும்.
உளுந்தை தனியாக ஊற வைக்கவும்.
ஒரு மணி நேரம் ஊறியதும் அரிசியுடன், உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
எண்ணெயை காய வைத்து சிறு சிறு வடைகளாக போட்டு நன்கு வேக விட்டு சிவந்ததும் எடுங்கள்.
விரும்பினால் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி, கருவேப்பிலை கலந்து சுடலாம்.