Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கார்கில் போர் ஏன் நடந்தது ? எதனால் நடந்தது ?

கார்கில்  போர் ஏன் நடந்தது ? எதனால் நடந்தது ?
, வியாழன், 23 ஜூலை 2020 (21:55 IST)
கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்திய வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றிலும் மறக்கவே முடியாத ஒரு போர் நடைபெற்றது. இப்போர் கார்கில் போர் ஆகும்.

இந்தியாவில் பிரிவினை ஏற்பட்ட பிறகு  அண்டை நாடாக பாகிஸ்தான் உதயமானது. அதன் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தாம்னுக்கும் கருத்துவேறுபாடுகள் அதிகரித்திக் கொண்டே வந்தது கஷ்மீர் யாருக்கும் சொந்தம் என்பது அது முற்றியது, ஆனால் சர்தார் வல்லபாடேலின் முயற்சியால் காஷ்மீர் மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன் காஷ்மீரை இணைதார்.

அதன் பின்னர் கடந்த 1999 ஆம் ஆண்டு காஷ்மீரை ஒட்டியுள்ள கார்கில் என்ற பகுதியை யார் கைப்பது என்ற இந்தியா கைப்பற்றியதில் முனைப்பாகக் கொண்டு பாகிஸ்தானை  வீழ்த்தி வெற்றி கொண்டது.

1999 ஆம் ஆண்டு மே 3ஆம் நாளில் தொடங்கிய இப்போர் ஜூலை 26 ஆம் தேதிவரை நீண்டது. இந்தப் போரில்  பல நூறு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தப் போரை நினைவுகூரும் விதமாக ஜூலை மாதம் 26 ஆம் தேதி கார்கில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

காஷ்மீரில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தது.  பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தந்திரை வேலை டைகர் மலையிலிருந்து ஸ்ரீநர் வரை தொடர்ந்தது.  குறிப்பாக அப்பகுதிகளில் இருந்த முக்கியமாக சாலைகளைஆக்ரமிக்க எண்ணினர்.

அதன் பின்னர் ஒரு ஆடு மேக்கும் நபர் பார்த்து இந்தத் தகவலை தெரிவித்தார்.முதலில் இந்திய ராணும்  கார்கிலுல் ஊடுருவியர்கள் பிரிவினைவாதிகள் என்று நினைத்தனர். இதையத்து பாகிஸ்தான் ராணுவம் இந்தியப் பகுதியில் ஊடுருவியுள்ளதை உறுதிசெய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்தனர். இதில் முக்கியமாக இந்திய ராணுவ வீர்ரர்களை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சிறைப்படுத்தி மனிதாபிமானமற்ற முறையில் கொன்றனர்.

இதனால் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்திற்கு பதிலடி கொடுக்க காத்திருந்தது. பின், கடந்த 1999 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்தி் ராணிவத்தின் தரைப்படை விமானப்படை அங்கு குவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் ராணுவம் ஏற்கனவே கைப்பற்றி இருந்த டைகர் மலை  ( 5307 மீ உயரம் )உள்ளிட்ட சில பகுதிகளை  இந்திய ராணுவம் ஜூலை மாதம் கைப்பற்றியது.இதனையடுத்து இந்தியாவின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது.

இறுதிக்கட்டப் போரின் போது கார்கில் அனைத்து பகுதிகளையும் இந்திய ராணுவம் கைப்பற்றியது சரித்திர சாதனை படைத்து,  ஜூலை 26 ஆம் தேதி இந்திய ராணுவம் கார்கில் பகுதில் நம் இந்திய கொடியை பறக்கவிட்டு தேசத்தின் பெருமை உலகுக்கு அறிவித்தது.

ஆனா; இப்போர் 85 நாட்கள் நடைபெற்றதுடன் இப்போர் உடனுக்குடன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது, இந்திய ராணுவ வீரகள் 500 பேர் வீரமரணம் அடைந்தனர் 1500 பேர் காயம் அடைந்தனர். பாகிஸ்தான் தரப்பில் உயிர்சேதமும் பொருட்சேதமும் அதிகம் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்கில் போர் தோல்வியை எவ்வாறு பார்த்தது பாகிஸ்தான் ராணுவம்?