Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முது​மலை புலி​கள் காப்​ப​கம் மூடப்​ப​டு​கி​றது

முது​மலை புலி​கள் காப்​ப​கம் மூடப்​ப​டு​கி​றது
, வியாழன், 13 மே 2010 (15:42 IST)
சு‌ற்றுலா‌ப் பய‌ணிகளு‌க்காக ச‌‌மீப‌த்‌தி‌ல் ‌திற‌ந்து‌விட‌ப்ப‌ட்ட முதுமலை பு‌லிக‌ள் கா‌ப்பக‌ம் நாளை முத‌ல் த‌ற்கா‌லிகமாக மூட‌ப்படு‌கிறது.

முதுமலை பு‌லிக‌ள் கா‌ப்பக‌த்‌தி‌ல் வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடை​பெ​ற​வுள்ள ஒருங்​கி​ணைந்த யானை​கள் கணக்​கெ​டுப்பு பணி கார​ண​மாக,​​ முது​மலை புலி​கள் காப்​ப​கம் வெள்​ளிக்​கி​ழமை ​(மே 14) முதல் 17-ம் தேதி வரை மூடப்​ப​டு​கி​றது.​

முது​மலை புலி​கள் காப்​பக கள இயக்​கு​நர் ராஜீவ் ஸ்ரீவத்​சவா கூறுகை‌யி‌ல், முது​மலை புலி​கள் காப்​ப​கத்​தில் நடை​பெ​ற​உள்ள ஒருங்​கி​ணைந்த யானை​கள் கணக்​கெ​டுப்பு பணி​யின்​போது,​​ வன உயி​ரி​னங்​க​ளுக்கு இடை​யூறு ஏற்​ப​டாத வகை​யில் இச்சர​ணா​ல​யம்,​​ 14-ம் தேதி பிற்​ப​கல் முதல் 17-ம் தேதி பிற்​ப​கல் வரை மூடப்​பட உள்​ளது.​

இந்த 3 நாட்​க​ளும் முது​மலை புலி​கள் காப்​ப​கத்​தைப் பார்ப்​ப​தற்கு சுற்​று​லாப் பய​ணி​கள் அனு​ம​திக்​கப்​ப​ட​மாட்​டார்​கள்.​ இத‌ற்கு பொது​மக்​க​ளும்,​​ சுற்​று​லாப் பய​ணி​க​ளும் ஒத்​து​ழைப்பு அளிக்க வேண்​டு​மென ராஜீவ் ஸ்ரீவத்​சவா தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil