Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாண தீர்த்தம் அருவியில் கு‌வி‌கிறது கூ‌ட்ட‌ம்

பாண தீர்த்தம் அருவியில் கு‌வி‌கிறது கூ‌ட்ட‌ம்
, வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (17:17 IST)
கு‌ற்றால‌ அரு‌விக‌ளி‌ல் ‌‌நீ‌ர் குறை‌ந்து‌வி‌ட்டதா‌ல் கோடை விடுமுறையை கொண்டாட பாணதீர்த்தம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் படையெடு‌த்த வண்ணம் உள்ளனர்.

நெல்லை மாவட்டத்தின் சிறப்புகளில் ஒன்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அருவிகள். பாபநாசம் மலைப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவி, பாணதீர்த்த அருவி, மணிமுத்தாறு அருவிகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும்.

இதில் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி ஆகிய இரு அருவிகளுக்கு நடந்தோ அல்லது வாகனத்திலோ சென்றுவிடலாம். பாணதீர்த்த அருவிக்கு பாபநாசம் அணையிலிருந்து படகு மூலமும் பின்னர் மலைப்பகுதியில் 15 நிமிடம் நடந்தும் செல்ல வேண்டும்.

கு‌ற்றால‌த்‌தி‌ல் ‌சீச‌ன் இ‌ல்லாததாலு‌ம், கோடை ‌விடுமுறை ம‌‌ற்று‌ம் வெ‌ப்ப‌த்‌தினாலு‌ம் பாண ‌தீ‌ர்‌த்த அரு‌வி‌க்கு சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ள் பலரு‌ம் படையெடு‌த்து‌ள்ளன‌ர். கூ‌ட்ட‌த்‌தி‌னரை‌க் க‌‌ட்டு‌ப்படு‌த்த முடியாத ‌நிலை உ‌ள்ளது.

காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே அங்கு செல்ல படகு போக்குவரத்து உண்டு. இதற்காக நபர் ஒருவருக்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த அருவியில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக குளிக்க வசதிகள் இல்லை. அது ஒரு பெரு‌ம் குறைதா‌ன்.

Share this Story:

Follow Webdunia tamil