Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இத்தனை வகை TEA-ஆ...? வாய பிளக்காதீங்க மக்கா!!

இத்தனை வகை TEA-ஆ...? வாய பிளக்காதீங்க மக்கா!!
, வெள்ளி, 12 மார்ச் 2021 (10:03 IST)
இயற்கை பொருட்களை கொண்டு வீட்டிலேயே பல விதமான தேநீர்களை போட்டுக்குடிக்கலாம். அவை பின்வருமாறு... 

 
செம்பருத்திப்பூ தேநீர்: ஒற்றை செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் கலந்து டீயாகச் சுவைக்கலாம்.
 
துளசி இலை தேநீர்: சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை தேநீர்ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை  அளிக்கும்.
 
ஆவாரம் பூ தேநீர்: காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து வாரம் டீ சாப்பிடலாம்.   இது உடலின் வெப்பத்தை தணிக்கும்.
 
கொத்தமல்லி தேநீர்: கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும்.
 
புதினா இலை தேநீர்: புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.
 
கொய்யா இலை தேநீர்: கொய்ய இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்லம் சேர்க்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொலஸ்ட்ராலை வேகமாக குறைக்க சில டிப்ஸ்