Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன தெரியுமா...?

ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன தெரியுமா...?
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத பவுர்ணமி தினத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் நான்கு திசைகளில் மட்டுமின்றி, உலகில் உள்ள அனைத்து இந்தியர்களும் ஹோலியை கொண்டாடி மகிழ்கின்றனர்.

மகாராஷ்டிரா, குஜராத் போன்ற சில மாநிலங்களில் இப்பண்டிகையை 5 நாட்கள் கொண்டாடுகின்றனர்.
 
காரணம்: இரணியன் என்னும் அரக்கன் தன்னையே எல்லோரும் கடவுள் என தொழவேண்டும் என்று எண்ண இரணியனின் மகன் பிரகலாதன், மகாவிஷ்ணு ஒருவரையே  கடவுள் என்று போற்றி பூஜித்து வந்தான். இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே கடவுள் என   பூஜிக்கும்படி வற்புறுத்தினான்.
 
இரணியன் தன் சகோதரி - நெருப்பினால் எரியாத தன்மை படைத்த ஹோலிகாவின் உதவியை நாடினான். தன் மகன் பிரகலாதனை அழிக்கும் பொடுட்டு இரணியன்  பிரகலாதனை தன் மடியில் அமர்த்திக் கொண்டு ஹோலிகாவை நெருப்பின் அமரும்படி கூறினான்.
webdunia
மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் அமர்ந்தான் பிரகலாதன். மகாவிஷ்ணுவின் கருணையால் பிரகலாதன் நெருப்பிலிருந்து மீண்டான்.  ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலானதை குறிக்கும் வகையில் ஹோலி பண்டிகையன்று வெட்ட வெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில்  எல்லோரும்  சந்தோஷமாக விளையாடி மகிழ்கிறார்கள். 
 
இரண்யகசிபுவின் சகோதரி அரக்கி ஹோலிகா இளம் பிரகல்லாதனை நெருப்பில் போட முயன்ற போது அதிலிருந்து வியக்கத்தக்க வகையில் அவர் தப்பித்ததன் நினைவாக நெருப்புகள் மூட்டப்படுகின்றன. ஹோலிகா எரிந்தாள், ஆனால் கடவுள் விஷ்ணுவின் மீது விடாப்பிடியான பக்தி கொண்ட பிரகல்லாதன், தனது   அசைக்க முடியாத தெய்வபக்தியின் காரணமாக எவ்வித காயமும் இன்றி உயிர் பிழைத்தான்.

ஹோலிகா தகனம், ஆந்திர பிரதேசத்தில் காம தகனம் அல்லது   காமன் எரிப்பு எனக் குறிப்பிடப்படுகின்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினமும் ஆரஞ்சுபழம் சாப்பிடுவதால் உண்டாகும் பலன்கள்...!!