Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமாவாசையில் காகத்திற்கு சோறு வைப்பது ஏன்?

அமாவாசையில் காகத்திற்கு சோறு வைப்பது ஏன்?
, புதன், 6 அக்டோபர் 2021 (10:23 IST)
மற்ற ஜீவராசிகளை விட்டு காகத்திற்கு முக்கியமாக அமாவாசை தினத்தில் உணவளிப்பது ஏன் என  தெரிந்துக்கொள்ளுங்கள்.
 
மறைந்த பெற்றோர் மற்றும் மூதாதையரை மனதில் நினைத்து அமாவாசை நாளில், ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்குப் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதற்கு உகந்த நேரம் மதிய வேளை. அதேபோல இந்நாளில் புரோகிதர் மூலமாக தர்ப்பணம் செய்வது சிறப்பு. 
 
தர்ப்பணம் முடிந்ததும், முன்னோர்களுக்கு படையல் போட்டு வழிபடவேண்டும். பிறகு முன்னோர்களின் பிரதிநிதிகளாகச் சொல்லப்படும் காகத்துக்கு உணவு  தரவேண்டும். உயிரினங்களில் கூடி வாழ்ந்து, சேர்ந்து உண்ணும் வழக்கமுள்ள உயர்ந்த குணம் கொண்டது காக்கை இனம். 
 
அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுதன் மூலம் பித்ருக்களின் ஆசியைப் பெற முடியும் என்று சாஸ்திரம் கூறுகிறது. எனவே காகத்திற்கும் அமாவாசை தினத்தில் உணவளிப்பது சிறப்பு. பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது இன்னும் நல்ல பலன் தரும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகாளய பட்ச காலத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது ஏன்...?