முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை விரதம்; வெற்றி மேல் வெற்றி தரும்!

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (20:54 IST)
முருகனுக்கு செவ்வாய்க்கிழமை உகந்தது என்பதால் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
செவ்வாய்க்கிழமை ஒரு பொழுது விரதம் இருந்து வந்தால் 9 வாரத்தில் உங்களுக்கு நல்லது நடக்கும் என்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும் என்றும் தைரியத்தைக் கொடுத்து நாம் எல்லா வகையிலும் வெற்றிபெற வைக்கும் சக்தி கிடைக்கும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
 
செவ்வாய்க்கிழமை முருகனுக்கு சிறப்பானது என்றால் மார்கழி மாத செவ்வாய்க் கிழமை என்பது முருகனுக்கு கூடுதல் சிறப்பு என்றும் மார்கழி மாத செவ்வாய் கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி விரதம் இருந்தால் துன்பங்கள் பறந்தோடும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். 
 
அதே போல் கார்த்திகை நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அமைந்த செவ்வாய்க் கிழமை விரதம் இருந்தால் அதிக பலன்கள் உண்டு என முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விபூதியால் தோன்றிய கோரக்கச் சித்தர்: காயகல்பச் செடி உருவான கதை

திருக்கார்த்திகை: பரணி தீபம் ஏற்றி முருகனை வழிபடும் மகத்துவம்!

சிதம்பரம் ஸ்ரீசிவகாமிசுந்தரி அம்மன் கோயில் ஐப்பசி பூரத் தேரோட்டம் கோலாகலம்

பழனி திருக்கார்த்திகை தீபத்திருவிழா: நவ. 27-ல் தொடக்கம்! டிச. 3-ல் முக்கிய நிகழ்வு

தஞ்சை வீர நரசிம்மர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments