Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலை கோயிலில் 7ஆம் தேதி தரிசன அனுமதி கிடையாது: அறநிலையத்துறை

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (13:59 IST)
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வரும் 7ஆம் தேதி அன்று பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனத்துக்கு அனுமதி கிடையாது என இந்து அறநிலையத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது
 
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் எதிர்வரும் 7ஆம் தேதி மற்றும் 8ஆம் தேதி ஆகிய நாட்களில் பௌர்ணமி வரை இருப்பதால் 7ஆம் தேதி அன்னாபிஷேகம் நடைபெறுகிறது
 
அதனால் அன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனத்துக்கு அனுமதி கிடையாது. மாலை 6 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுப்புவார்கள் 
 
மேற்கண்ட தேதிகளில் அதிக அளவு பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பக்தர்கள் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்கவும் விரைந்து தரிசனம் செய்வதற்கு ஏதுவாக நவம்பர் 7 மற்றும் நவம்பர் 8 ஆகிய இரண்டு நாட்களுக்கு அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது
 
மேற்படி பவுர்ணமி தினத்தன்று எந்தவித தரிசனத்திற்கு முன்னுரிமை வழங்கப்படாது. இவ்வாறு கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு பதவிகள் தொடர்பான பொறுப்புகள் அதிகரிக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (11.04.2025)!

திருப்பதியில் தொடங்கியது வசந்த உற்சவ விழா.. குவிந்தது பக்தர்கள் கூட்டம்..!

இந்த ராசிக்காரர்களுக்கு கடன் விஷயங்களில் கவனம் தேவை! - இன்றைய ராசி பலன்கள் (10.04.2025)!

ஆன்மீக களை கட்டும் பழனி.. இன்று தங்கரதம்.. நாளை திருக்கல்யாணம்..!

இந்த ராசிக்காரர்களுக்கு நிலுவைத்தொகை வந்து சேரும்! - இன்றைய ராசி பலன்கள் (09.04.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments