திருவண்ணாமலை கோயிலில் 7ஆம் தேதி தரிசன அனுமதி கிடையாது: அறநிலையத்துறை

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (13:59 IST)
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வரும் 7ஆம் தேதி அன்று பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனத்துக்கு அனுமதி கிடையாது என இந்து அறநிலையத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது
 
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் எதிர்வரும் 7ஆம் தேதி மற்றும் 8ஆம் தேதி ஆகிய நாட்களில் பௌர்ணமி வரை இருப்பதால் 7ஆம் தேதி அன்னாபிஷேகம் நடைபெறுகிறது
 
அதனால் அன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனத்துக்கு அனுமதி கிடையாது. மாலை 6 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுப்புவார்கள் 
 
மேற்கண்ட தேதிகளில் அதிக அளவு பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பக்தர்கள் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்கவும் விரைந்து தரிசனம் செய்வதற்கு ஏதுவாக நவம்பர் 7 மற்றும் நவம்பர் 8 ஆகிய இரண்டு நாட்களுக்கு அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது
 
மேற்படி பவுர்ணமி தினத்தன்று எந்தவித தரிசனத்திற்கு முன்னுரிமை வழங்கப்படாது. இவ்வாறு கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி மட்டுமல்ல, இந்த கோவிலுக்கு சென்றால் கூட வாழ்வில் திருப்பம் தரும்..!

சோளிங்கர் யோக நரசிம்மர்: கார்த்திகை மாதத்தில் கண் திறக்கும் அற்புதம்!

சபரிமலை ஐயப்பனின் அருள் பெற வேண்டுமா? இதோசக்திவாய்ந்த மந்திரங்கள்

பாலகிரி மலை முருகன்: சங்கடங்கள் தீர்க்கும் சுயம்பு வடிவம்!

மயிலாப்பூரில் ஸ்ரீ சத்ய சாயி பகவானின் 'ப்ரேம ரத பவனி' உலா! சென்னை, மயிலாப்பூர்:

அடுத்த கட்டுரையில்
Show comments