Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி உற்சவம்: தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு..!

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி உற்சவம்: தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு..!
, சனி, 11 நவம்பர் 2023 (18:00 IST)
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி உற்சவம் நாளை தொடங்க இருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி திருவிழா அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் நாளை முதல் நவம்பர் 18ஆம் தேதி வரை  திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் ஆறுமுக சுவாமி கந்த சஷ்டி உற்சவம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
நிறைவு நாளான 18 ஆம் தேதி தென்மாட வீதியில் சூரசம்ஹாரம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன் பின்னர் 19ஆம் தேதி மாலை சந்தன காப்பு, 20ஆம் தேதி பாலாபிஷேகம் நடைபெறும் என்றும் இந்து சமய அறநிலை துறையினர் கந்தசஷ்டி உற்சவ விழாவை ஏற்பாடு செய்து வருவதாகவும் தேவசேன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும்! – இன்றைய ராசி பலன்கள்(11-11-2023)!