Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல ஜென்மமாக தொடரும் நாக தோஷம் விலக வேண்டுமா? இந்த கோவிலுக்கு உடனே போங்க..!

Mahendran
சனி, 19 ஏப்ரல் 2025 (18:39 IST)
சோழவள நாட்டில் உள்ள சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகச் செம்பங்குடி நாகநாத சுவாமி திருக்கோவில் விளங்குகிறது. இங்கு இறைவன் நாகநாதர், அம்பாள் கற்பூரவல்லி தயார். ஆதிகேதுவுக்கு தனி சன்னிதி உள்ளது. நாகதோஷ நிவாரணத்திற்கு சிறந்த தலமாகும்.
 
பாற்கடலைக் கடைந்த போது அமிர்தம் உண்ட அசுரனான ஸ்வபானுவின் தலை சீர்காழியில், உடல் செம்பங்குடியில் விழுந்தது. அவை பாம்புகளாக மாறி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து தவமிருந்தன. சிவபெருமான் ராகு, கேதுவாக கிரகபதவியளித்து அருள்பாலித்தார். கேதுவின் பாம்புத் தலை உடல் இங்கு குடியிருப்பதால் ‘செம்பாம்பினன்குடி’ என்ற பெயர் வந்தது. அதுவே ‘செம்பங்குடி’யாக மாற்றம் பெற்றது.
 
ஆலயம் வயல்வெளிகளை சூழ, அமைதியான இடத்தில் உள்ளது. முக்கோண வடிவமைப்புடன், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறையில் நாகநாதர் சிறிய திருமேனியுடன் காட்சி தருகிறார். "கேதீஸ்வரர்" என்றும் அழைக்கப்படுகிறார். வாம பாகத்தில் கற்பூரவல்லி அம்பாள் கிழக்கு நோக்கி எழுந்தருள்கிறார். ஆதி கேதுவுக்கான தனி சன்னிதியும் உள்ளது.
 
ஒன்றுகால பூஜை நடைபெறுகிறது. பசும்பாலால் அபிஷேகம், சிவந்த அல்லி மலரால் அர்ச்சனை, புளியோதரை நைவேத்யமாக படைக்கப்படுகிறது. நாகதோஷ நிவாரணம், அறிவு வளர்ச்சி, சுகபோகங்களுக்காக இங்கு வழிபடலாம்.
 
இடம்: சீர்காழி அருகே, திருமுல்லைவாயில் செல்லும் வழியில் 3 கிமீ தொலைவில் செம்பங்குடி அமைந்துள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகு, கேதுவை மட்டும் ஏன் வலமிருந்து இடமாக சுற்ற வேண்டும்? முக்கிய தகவல்..!

இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள்! - இன்றைய ராசி பலன்கள் (11.06.2025)!

மன அமைதி வேண்டுமா? சாய்பாபாவின் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்

இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (10.06.2025)!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் களைகட்டும் வைகாசி விசாகம்.. குவிந்த பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments