Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா! இன்று மாலை கோலாகல தொடக்கம்!

Prasanth Karthick
திங்கள், 30 டிசம்பர் 2024 (11:39 IST)

திவ்ய தேசங்களில் சிறப்பு வாய்ந்த ஒன்றான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி திருவிழா கோலாகலமாக தொடங்குகிறது.

 

 

பூலோக வைகுண்டம் என ஆன்மிக பெரியோர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் 108 திவ்ய தேசங்களில் முதன்மையான ஒன்றாகும். ஸ்ரீரங்கத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

 

இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா இன்று தொடங்குகிறது. இன்று மாலை திருநெடுந்தாண்டகம் சொல்லி விழா தொடங்கப்படும். தொடர்ந்து நாளை பகல்பத்து நிகழ்வு தொடங்குகிறது. நாளை காலை 7.45 மணிக்கு நம் பெருமாள் மூல ஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ஜுன மண்டபம் வந்தடைகிறார். அங்கு அரையர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தங்களை பாடுவர்.

 

இரவு 7 மணி வரை அர்ஜுன மண்டபத்தில் காட்சி தரும் நம் பெருமாள் இரவு 9.45 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைவார். 

 

வைகுண்ட ஏகாதசி விழாவில் சிகர நிகழ்வாக 16ம் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், 17ம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 19ம் தேதி தீர்த்தவாரி கண்டு அருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றும், 20ம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிறைவு காண்கிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரம் தொடர்பான அலைச்சல் உண்டாகும்! இன்றைய ராசி பலன்கள் (20.06.2025)!

பாவங்கள் போக்கும் பாபநாசம் 108 சிவாலயம்: வேண்டுதல்கள் நிறைவேற்றும் கீழை ராமேஸ்வரம்!

இந்த ராசிக்காரர்களுக்கு கடுமையான பணிகள் எளிதாக முடியும்! இன்றைய ராசி பலன்கள் (19.06.2025)!

சிருங்கேரி கமண்டல கணபதி கோவில்: வற்றாத நீர் சுரக்கும் அதிசயம்!

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து திருப்திகரமாக இருக்கும்! இன்றைய ராசி பலன்கள் (18.06.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments