Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகா சிவராத்திரி விரதம் இருக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

Mahendran
வியாழன், 20 பிப்ரவரி 2025 (18:45 IST)
சிவ விரதங்களில் ஒன்றான சிவராத்திரியை பக்தியுடன் அனுசரிக்க வேண்டும். அதிகாலையில் எழுந்து நீராடி, திருநீறு அணிந்து, சிவபெருமானை துதிக்க வேண்டும். பகல் முழுவதும் உணவு அருந்தாமல் விரதம் இருந்து, மாலை நேரத்தில் மீண்டும் நீராடி சிவாலயத்தில் வழிபாடு செய்ய வேண்டும்.

இரவில் நான்கு ஜாமங்களிலும் சிவ பூஜை செய்ய வேண்டும். மண்ணால் சிவலிங்கம் உருவாக்கி, பால், தயிர், தேன், நெய், சர்க்கரை கொண்டு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் பாடி இறைவனை நினைத்தல் சிறப்பு. இறுதியாக, நான்கு காலங்களிலும் அபிஷேகங்கள் செய்து, பரமேஸ்வரனை வழிபட வேண்டும்.

சிவராத்திரியில் மிருத்யுஞ்சய மந்திரம் ஓதுவது உடல் நோய்களை நீக்கும். தான தருமங்கள் செய்வதால் புண்ணியம் சேரும். வில்வத்தால் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். சிவ பூஜை செய்ய முடியாதவர்கள், கோவிலில் நடைபெறும் பூஜையில் கலந்து கொள்ளலாம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தொடர்ந்து ஜெபிக்க வேண்டும்.

மறுநாள் காலை நீராடி, இறைவனை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும். தீபங்கள் ஏற்றி வழிபட்டால் ஆன்மீக ஒளி கிடைக்கும். கோவிலுக்குள் நுழையும் முன் விநாயகரை வணங்கி, சிவன் மற்றும் அம்பாளை வலம்வர வேண்டும். பிரசாதத்தை மரியாதையுடன் பெற வேண்டும். இறைவனை பக்தியுடன் நினைத்து வழிபட்டால் சகல பாபங்களும் தீரும்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னிமலை முருகப்பெருமானின் திருத்தலத்தின் சிறப்புகள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு கடன் பாக்கிகள் வசூலாகும்! - இன்றைய ராசி பலன்கள் (17.02.2025)!

ஆதியோகி திருவுருவம் 112 அடியில் அமைக்கப்பட்டிருப்பதன் பின்னணி என்ன?

இந்த ராசிக்காரர்களுக்கு நீண்ட கால பிரச்சினைகளில் முடிவு கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (16.02.2025)!

`வாராங்கல் பத்மாட்சியை கும்பிட்டால் வேண்டும் வரம் கிடைக்கும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments