Publish Date: Wed, 08 Feb 2023 (19:03 IST)
Updated Date: Wed, 08 Feb 2023 (19:04 IST)
நாளை சங்கடகர சதூர்த்தி திருநாளில் விரதம் இருந்தால் கோடி நன்மைகள் கிடைக்கும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகரை வழிபட்டு விரதம் இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு விரதம் இருந்து விநாயகரை வழிபடுவது அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை நீராடி விநாயகரை வழிபட்டு விரதத்தை தொடங்க வேண்டும் என்றும் நாள் முழுவதும் உண்ணா நோன்பு இருந்து மாலையில் மீண்டும் நீராடி விநாயகரை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
சங்கடகர சதுர்த்தி தினத்தில் விரதம் இருந்தால் மிகப்பெரிய பலன் கிடைக்கும் என்றும் எந்தவித தடையும் நீங்கிவிடும் என்றும் ஆன்மீகவாதிகள் கூறி உள்ளனர்.