சபரிமலை ஐயப்பனின் அருள் பெற வேண்டுமா? இதோசக்திவாய்ந்த மந்திரங்கள்

Mahendran
வெள்ளி, 21 நவம்பர் 2025 (17:56 IST)
ஐயப்ப வழிபாட்டின் அடிப்படைத் தத்துவம் மிகவும் எளிமையானது: அது ஒழுக்கம். ஒழுக்கத்துடன் வாழ்வதன் மூலம் மனதில் அமைதி நிலைக்கிறது. அமைதி குடிகொள்ளும்போது, கர்வம் மறைந்து, பக்தி மேலோங்குகிறது. பக்தியின் உச்ச நிலையே சரணாகதி ஆகும். "உன்னைத் தவிர வேறு கதியில்லை" என்று நம்மை முழுவதுமாக ஒப்படைத்துவிட்டால், "நமக்கு எப்போது என்ன தர வேண்டும் என்று அவனுக்குத் தெரியும், அவன் பார்த்துக் கொள்வான்" என்ற சாத்வீக மனநிலை தானாகவே வந்துவிடும். 
 
இந்த சாத்வீக மனநிலையை உருவாக்கவே ஐயப்ப விரதமும் பூஜைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. புராணங்கள் ஐயப்ப சுவாமியை தர்ம சாஸ்தா என்று சிறப்பிக்கின்றன. தர்ம சாஸ்தா காயத்ரி மந்திரம்தினமும் தர்ம சாஸ்தா காயத்ரி மந்திரத்தை 11 முறை ஜபிப்பதன் மூலம் மனோபலம் பெருகும். இதுவரை இருந்த தேவையற்ற குழப்பங்களும், கவலைகளும் விலகும்.
 
ஓம் பூதாதி பாய வித்மஹே
ஓம் பூதாதி பாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி} 
தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்
 
பூதநாத ஸதானந்தா
சர்வ பூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ
 
சபரிமலை நாதனை, இந்த மகா மந்திரங்களை ஜபித்து வழிபடுவதால், அவர் அருளும் பொருளும் அள்ளித்தருவார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தஞ்சை வீர நரசிம்மர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்து செல்லக்கூடாத பொருட்கள்: சில பாரம்பரிய நம்பிக்கைகள்

கார்த்திகை மாத சிறப்பு: ஆறுபடை வீடுகளில் முருகனை வழிபட்டால் 16 பேறுகள் நிச்சயம்!

முருகன் வழிபட்ட திருமுருகநாதர்: சுந்தரரின் திருவிளையாடல் நடந்த திருமுருகன்பூண்டி!

குலுக்கல் முறை அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் ரத்து: திருப்பதி தேவஸ்தானம் முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments