Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்: இன்று முதல் முன்பதிவு தொடக்கம்

Mahendran
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (19:09 IST)
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணத்தை தரிசனம் செய்ய இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
முன்பதிவு செய்ய வருபவர்கள் ஆதார் அட்டையின் நகல், புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று, செல்போன் எண் மற்றும் இமெயில் முகவரி கொண்டு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் முன்பதிவு செய்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மொபைல் போன் மூலம் தகவல் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் அன்று காலை 8.35 மணி முதல் 8,59 மணி வரை திருக்கல்யாணம் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது 
 
திருக்கல்யாணத்தை பார்ப்பதற்கு 200 ரூபாய், 500 ரூபாய் கட்டண டிக்கெட் வைத்திருப்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மொத்தம் 12000 பக்தர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 இதற்கான டிக்கெட்டுகளை maduraimeenakshi.hrce.tn.gov.in ,  hrce.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பெற்றுக் கொள்ளலாம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

`வாராங்கல் பத்மாட்சியை கும்பிட்டால் வேண்டும் வரம் கிடைக்கும்..!

இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்! - இன்றைய ராசி பலன்கள் (15.02.2025)!

பழனி தைப்பூச திருவிழா தெப்ப உற்சவத்துடன் நிறைவு.. பக்தர்கள் சாமி தரிசனம்..!

இந்த ராசிக்காரர்கள் பண முதலீட்டில் அவசரம் காட்ட வேண்டாம்! - இன்றைய ராசி பலன்கள் (14.02.2025)!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா.. சிறப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments