திருச்செந்தூரில் மாசிப்பெருவிழா. கொடியேற்றம் தேதி அறிவிப்பு..!

Mahendran
திங்கள், 24 பிப்ரவரி 2025 (18:26 IST)
திருச்செந்தூரில் ஒவ்வொரு வருடமும் மாசி பெருவிழா சிறப்பாக நடைபெறும் நிலையில், இந்த ஆண்டு மாசி பெருவிழா மார்ச் 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுவாமி திருக்கோயிலில் மாசி பெருவிழா மார்ச் 3ஆம் தேதி முதல் மார்ச் 14ஆம் தேதி வரை நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
மேலும், மாசி பெருவிழாவின் பத்தாவது நாளான மார்ச் 12ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மாசி 11ஆம் நாள், மார்ச் 13ஆம் தேதி காலை 10 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறும். அன்றைய தினம் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, சுவாமி தெப்பத்தில் 11 சுற்றுகள் சுற்றி வருவார் என்றும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 
மாசி பெருவிழாவுக்கு திருச்செந்தூருக்கு அதிக பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு வியாபார வளர்ச்சி கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (07.11.2025)!

தம்மம்பட்டி சிவன் கோயிலில் 5000 பக்தர்கள் பங்கேற்ற பிரமாண்ட அன்னாபிஷேகம்!

ஆயிரம் கிலோ அரிசி சாதத்தால் பிரம்மாண்ட அன்னாபிஷேகம்: தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு பக்தர்கள் வழிபாடு

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து திருப்தி தரும்! - இன்றைய ராசி பலன்கள் (05.11.2025)!

திருநீறு சாம்பலில் உதித்தவர் கோரக்கர் சித்தர்! கோடி புண்ணியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments