சுவாமிமலை கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா: நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

Mahendran
புதன், 4 டிசம்பர் 2024 (18:07 IST)
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில் திருக்கார்த்திகை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்க இருப்பதாக கோவில் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலை என்பது முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. முருகனின் நான்காம் படை வீடான இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை திருவிழா சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாளை காலை கொடியேற்றத்துடன் இந்த விழா தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் பரிவாரங்களுடன் மலைக்கோவில் இருந்து உற்சவம் மண்டபம் நோக்கி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து எட்டு நாட்கள் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா காட்சி நடைபெறும் என்றும் டிசம்பர் 13ஆம் தேதி திருக்கார்த்திகை தினத்தன்று ஒன்பது மணிக்கு தேர் வடம் பிடித்த நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு திருக்கார்த்திகை திருவிழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்து செல்லக்கூடாத பொருட்கள்: சில பாரம்பரிய நம்பிக்கைகள்

கார்த்திகை மாத சிறப்பு: ஆறுபடை வீடுகளில் முருகனை வழிபட்டால் 16 பேறுகள் நிச்சயம்!

முருகன் வழிபட்ட திருமுருகநாதர்: சுந்தரரின் திருவிளையாடல் நடந்த திருமுருகன்பூண்டி!

குலுக்கல் முறை அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் ரத்து: திருப்பதி தேவஸ்தானம் முடிவு..!

இந்த ராசிக்காரர்களுக்கு வியாபார வளர்ச்சி கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (07.11.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments