Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்திரகோசமங்கை கோவில் கும்பாபிஷேகம்: மரகத நடராஜர் தரிசனம்..!

Mahendran
செவ்வாய், 1 ஏப்ரல் 2025 (19:24 IST)
ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் பிரபலமான மங்களேசுவரி உடனுறை மங்களநாதர் கோவில் அமைந்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு, வரவிருக்கும் 4-ந்தேதி, இந்த கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு, சமஸ்தான தேவஸ்தானம், மற்றும் நன்கொடையாளர்களின் ஆதரவுடன் பல கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
 
கும்பாபிஷேகம் அன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை நடக்கிறது. இதற்காக, கோவிலில் உள்ள அரிய மரகத நடராஜர் சன்னதி இன்று மாலை திறக்கப்பட்டு, சிலை மீது பூசப்பட்ட சந்தனம் நீக்கப்படுகிறது. 
 
இதுகுறித்து திவான் பழனிவேல் பாண்டியன் கூறியதாவது: "கும்பாபிஷேகத்திற்கு முன் 4 நாட்கள் மரகத நடராஜர் சன்னதி பக்தர்களுக்காக திறந்திருக்கும். 4-ந்தேதி பின்னர், மீண்டும் சந்தனம் பூசப்பட்டு சன்னதி மூடப்படும்."
 
கும்பாபிஷேக நாளன்று மேல்தளத்தில் 1500 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஏராளமான பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு உறவினர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம்! - இன்றைய ராசி பலன்கள் (28.03.2025)!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா.. குவிந்த பக்தர்கள்

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – விருச்சிகம்!

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – துலாம்!

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கன்னி!

அடுத்த கட்டுரையில்
Show comments