Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒப்பிலியப்பன் கோவிலில் பங்குனி பிரமோற்சவ விழா தேரோட்டம்: குவிந்த பக்தர்கள்..!

Mahendran
செவ்வாய், 25 மார்ச் 2025 (18:30 IST)
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் அமைந்துள்ள வேங்கடாசலபதி சுவாமி திருக்கோவில், 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். ‘தென்னக திருப்பதி’ என்று போற்றப்படும் இத்தலத்தில், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
 
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் 12 நாள்கள் பிரமோற்சவம் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு விழா மார்ச் 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் உற்சவர் பொன்னப்பன், பூமிதேவி அலங்கரிக்கப்பட்டு வீதி உலா சென்றனர். விழாவின் முக்கியமான தேரோட்டம் இன்று  நடைபெற்றது.
 
அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர்கள் எழுந்தருள, பக்தர்கள் உற்சாகமாக தேரை இழுத்தனர். கோவில் யானை ‘பூமா’ முன் சென்றது. நாட்டியக் குதிரை, செண்டை மேளம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மக்களை மகிழ்வித்தன. தேர் ஊர்வலம் முடிந்ததும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரம் தடையின்றி நடக்கும்! இன்றைய ராசி பலன்கள் (12.06.2025)!

ராகு, கேதுவை மட்டும் ஏன் வலமிருந்து இடமாக சுற்ற வேண்டும்? முக்கிய தகவல்..!

இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள்! - இன்றைய ராசி பலன்கள் (11.06.2025)!

மன அமைதி வேண்டுமா? சாய்பாபாவின் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்

இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (10.06.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments