Publish Date: Fri, 14 Oct 2022 (11:38 IST)
Updated Date: Fri, 14 Oct 2022 (11:47 IST)
ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள பாடல்கள் யாவும் மிகுந்த மந்திர சக்தி உடையவை. சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்கத் தெரியாதவர்கள் ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள 32 பாடல்களையும் தினம் படித்து வரலாம்.வராஹி சித்தி அர்ச்சனையில் உள்ள மந்த்ரங்களைக் கொண்டும் அர்ச்சிக்கலாம்.
செல்வம் பெருக:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாராஹி தேவியை நம:
க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் ஸித்திஸ்வரூபிணி ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.
மூலம்:
லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவீம் பாதுகாப்பாம். ஸ்வாஹா !
காயத்ரி மந்திரம்:
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத் !
ஸ்ரீ மஹாவாராஹியின் பன்னிரு திருநாமங்கள்:
மேற்கண்ட மந்திரத்தை ஜெபிப்பவர்கள், ஜெபிக்க இயலாதவர்கள் யாவரும் கீழ்க்காணும் ஸ்ரீ மஹாவாராஹியின் 12 நாமங்களைக் காலையில் குளித்து முடித்ததும் சொல்லி வணங்க அவள் அருள் துணை நிற்கும்.
1. பஞ்சமி, 2. தண்டநாதா, 3. சங்கேதா, 4. சமயேச்வரி, 5. சமயசங்கேதா, 6. வாராஹி, 7. போத்ரிணி, 8. சிவா, 9. வார்த்தாளி, 10. மகாசேனா, 11. ஆக்ஞா சக்ரேச்வரி, 12. அரிக்னீ மனதில் தைரியம் பிறக்க, கேட்ட வரங்கள் கிடைக்க வராகியை வணங்குவோம்.
Sasikala
Publish Date: Fri, 14 Oct 2022 (11:38 IST)
Updated Date: Fri, 14 Oct 2022 (11:47 IST)