Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

Sadhuragiri
, செவ்வாய், 2 மே 2023 (22:08 IST)
விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு அருகேயுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு அருகேயுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில். இந்தியக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு  நடத்த  4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  நாளை முதல்   சித்திரை  மாதம் பிரதோஷம் – அமாவாசை வழிபாட்டையொட்டி, பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே,   வரும் சித்திரை மாத பவுர்ணமி 5 ஆம் தேதி,3 ஆம் தேதி பிரதோஷம், என்பதால், வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டடுள்ளது.
 அதன்படி நாளை முதல் 6 ஆம் தேதி வரை 4 நாட்ககள் பக்தர்கள் சதுரரகிரி மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதில், 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், மற்றும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும்தான் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டுசெல்ல அனுமதியில்லை என்றும்,  நீரோடையில் குளிக்ககூடாது என்று வனத்துறை கூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏப்ரல் 5ஆம் தேதி சித்ரா பெளர்ணமி.. திருவண்ணாமலையில் கிரிவலம் எப்போது செல்லலாம்?