Publish Date: Wed, 21 Dec 2022 (20:18 IST)
Updated Date: Wed, 21 Dec 2022 (20:22 IST)
பல்வேறு காரணங்களால் திருமண தடை உள்ளவர்கள் கடலூர் அருகே உள்ள தேவநாத சுவாமி திருக்கோயிலுக்கு செல்லுங்கள் என ஆன்மீகவாதிகள் அறிவித்துள்ளனர்.
திருமணத்தடையை நீக்கும் தலமாக இந்த கோவில் பல ஆண்டுகளாக சிறந்து விளங்குகிறது என்றும் பெரும்பாலான பக்தர்கள் தங்கள் மகன் மற்றும் மகளின் திருமணம் விரைவில் நடக்க வேண்டும் என இந்த கோவிலில் வந்து வேண்டிக் கொள்வார்கள் என்றும் இந்த கோவிலில் வந்து வேண்டிக் கொண்டால் திருமணம் கைகூடியதாக பலர் தகவல் தெரிவித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது
அதுமட்டுமின்றி ஒவ்வொரு முகூர்த்த நாளில் இந்த கோவிலில் குறைந்தது 100 திருமணமாவது நடக்கும் என்றும் அதிகபட்சமாக இதுவரை 200 திருமணங்கள் நடந்துள்ளது என்றும் கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கோவிலில் திருமணம் செய்து கொள்ளும் மணமக்களுக்கு சான்றிதழ் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது