Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பலவகையான விரதங்களின் அற்புத பலன்கள் !!

Fasting
, செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (11:39 IST)
பொதுவாக விரதங்கள் நாம் இருப்பது அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்றே. ஆனால் எந்த விழாவின்போது விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.


சங்கடஹர சதுர்த்தி: தேவையற்று ஏற்படும் சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து மனதில் அமைதி நிலவும். விநாயக சதுர்த்தி: வாழ்வின் விக்னங்கள் அனைத்தும் தீர்ந்து விநாயகனின் பூரணமான அருள் கிட்டும்.

சரவண விரதம்: குடும்பத்தில் அனைவரிடமும் ஒற்றுமை பெருகி. ஆனந்தமும், சந்தோஷமும் கிட்டும். சஷ்டி விரதம்: மனதில் எண்ணிய காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேறும். புண்ணியம் தரும்.

வைகுண்ட ஏகாதசி: குடும்பத்தில் நிலவி வந்த வறுமைகள் அனைத்தும் நீங்கி, செல்வ வளம் கொழித்திடும். கோகுலாஷ்டமி விரதம்: மனநலம், நீண்ட நல் ஆயுள், குறையாத செல்வம் அனைத்தும் கிடைக்கப் பெறுவர்.

கௌரி விரதம்: குறையாத செல்வமும், நீண்ட ஆயுளும், நல் மனைவியும், குழந்தைகளும் கிடைக்கும். வரலெஷ்மி விரதம்: மாங்கல்ய பாக்கியம் கிடைத்திடும். திருமணமான தம்பதியரிடையே நல் ஒற்றுமை நிலவும்.

பிரதோஷ விரதம்: மன அமைதி கிடைத்திடும், நீண்ட நல் ஆயுள் அமைந்திடும். செல்வ வளம் பெருகிடும். மகா சிவராத்திரி: சிவ பெருமானின் அருள் கிடைக்கும், வாழ்வில் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

வைகாசி விசாகம்: நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்கள் குழந்தைச் செல்வம் கிடைக்க பெறுவர். நவராத்திரி விரதம்: மனநலம், நீண்ட நல் ஆயுள், குறையாத செல்வம் அனைத்தும் கிடைக்கப் பெறுவர்.

அமாவாசை விரதம்: பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணத்தால், அவர்களது ஆசிகள் அனைத்தும் கிடைக்கும். பௌர்ணமி விரதம்: வாழ்வில் ஏற்பட்ட அனைத்து கஷ்டங்களும் விலகி, சுகமான வாழ்வு அமையும்.

கார்த்திகை விரதம்: எல்லாவிதமான நன்மைகளும் வந்தடையும். முருகனின் பரிபூரண ஆசி கிடைக்கும். விரதத்தின் மகிமையினை புரிந்துகொண்டு விரதமிருந்தால் வளமும் நலமும் பெற முடியும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாராஹி அம்மனுக்கு உகந்த நைவேத்திய பொருட்கள் என்ன...?