Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலை கிரிவலம்: ஆனி பௌர்ணமி தேதிகள் அறிவிப்பு!

Mahendran
செவ்வாய், 8 ஜூலை 2025 (18:30 IST)
உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலையில், மலையையே சிவபெருமானின் அம்சமாக போற்றும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இதனால், அண்ணாமலை என்று அழைக்கப்படும் இந்த மலை, பக்தர்கள் மத்தியில் பெரும் புனிதமாகக் கருதப்படுகிறது. 
 
ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும், சுமார் 14 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில், லட்சக்கணக்கான பக்தர்கள் மலையைச் சுற்றி வலம் வந்து இறைவனை வழிபடுகின்றனர்.
 
குறிப்பாக, கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் சித்ரா பௌர்ணமி போன்ற சிறப்பு நாட்களில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வந்து ஆன்மிகப் பரவசத்தில் திளைப்பார்கள்.
 
இந்த நிலையில், ஆனி மாத பௌர்ணமிக்கான கிரிவலம் வரும் ஜூலை 10 ஆம் தேதி அதிகாலை 2:33 மணிக்குத் தொடங்கி, ஜூலை 11 ஆம் தேதி அதிகாலை 3:08 மணிக்கு நிறைவடையும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடலாம்.
 
தற்போதைய வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதால், பக்தர்கள் பகல் நேரத்தில் கிரிவலம் செல்வதை தவிர்த்து, அதிகாலை, மாலை அல்லது இரவு நேரங்களில் கிரிவலம் வருவது நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெருமாள் பக்தி: புரட்டாசி மட்டுமல்ல, எல்லா சனிக்கிழமைகளும் வரம்தரும் நாளே! - வேங்கடவனை வழிபடும் முறை!

இந்த ராசிக்காரர்களுக்கு தடைநீங்கி காரியங்கள் நடந்து முடியும்! இன்றைய ராசி பலன்கள் (04.07.2025)!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு சாமர்த்தியமான செயல்களால் நற்பெயர் கிடைக்கும்! இன்றைய ராசி பலன்கள் (03.07.2025)!

பிரதோஷ தானங்கள்: ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பலன்!

அடுத்த கட்டுரையில்
Show comments