ஆடி 3வது சனிக்கிழமை.. குச்சனூரில் குவிந்த பக்தர்கள்..!

Mahendran
சனி, 3 ஆகஸ்ட் 2024 (18:38 IST)
இன்று ஆடி சனிக்கிழமையை அடுத்து குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் குவிந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
 
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகம் மட்டும் இன்றி இந்த கோயிலுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சனி தோஷம் நீங்குவதற்காக பரிகாரம் செய்ய பக்தர்கள் வருகை தருவதுண்டு.
 
குறிப்பாக ஆடி மாதம் வரும் அனைத்து சனிக்கிழமைகளும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த வகையில் இன்று ஆடி மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ஆடி பதினெட்டாம் பெருக்கு என்பதால் அதிகாலையிலேயே அதிக அளவு பக்தர்கள் வருகை தந்தனர். இதனை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஞானம், கல்வி அருளும் கும்பேஸ்வரர்: கும்பகோணம் ஆலயச் சிறப்புகள்!

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில்: நாய் வாகனமில்லா யோக பைரவர் தரிசனம்

மலைபோன்ற சிக்கல்களை தீர்க்கும் கரியமாணிக்கப் பெருமாள் திருத்தலம்!

திருப்பதி வைகுண்ட துவார தரிசனம்: 10 நாள் வழிகாட்டுதல்கள் வெளியீடு – சலுகைகள் ரத்து!

கடுமையான கிரக தோஷங்களை போக்கும் திருக்கோடிக்காவல் திருத்தலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments