Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அழகை பராமரிப்பதில் அற்புத நிவாரணம் தரும் நல்லெண்ணெய் !!

அழகை பராமரிப்பதில் அற்புத நிவாரணம் தரும் நல்லெண்ணெய் !!
நல்லெண்ணெய் உதடுகளுக்கு ஒரு நல்ல நிறத்தை வழங்கும். ஒருவர் தினமும் நல்லெண்ணெய்யை உதடுகளுக்கு பயன்படுத்தி வந்தால், உதடுகள் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும். அதற்கு நல்லெண்ணெய்யை தினமும் இரவில் படுக்கும் முன் உதட்டில் தடவிக் கொள்ளுங்கள்.

கெமிக்கல் கலந்த மேக்கப் ரிமூவரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, இயற்கை வழியில் மேக்கப்பை நீக்க நினைத்தால், நல்லெண்ணெய்யைப் பயன்படுத்துங்கள். அதுவும் பஞ்சு உருண்டையில் நல்லெண்ணெய்யை நனைத்து, முகத்தை தினமும் துடைத்து எடுங்கள். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், மேக்கப் முழுமையாக நீங்குவதோடு, சருமமும் வறட்சியடையாமல் இருக்கும்.
 
நல்லெண்ணெய்யை ரோஸ் வாட்டருடன் சேர்த்து குதிகால் வெடிப்பை சரிசெய்யலாம். அதற்கு நல்லெண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டரை சரிசம அளவில் எடுத்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் குதிகாலில் தடவுங்கள். மறுநாள் காலையில் காலை வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இதனால் விரைவில் குதிகால்  வெடிப்பு நீங்கும்.
 
கோடையில் ஒவ்வொருவரும் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை தான் சருமம் கருமையாவதை தடுக்க 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை ஒரு பௌலில் போட்டு,  அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, கருமையான பகுதிகளில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து, பின்  வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
 
உங்கள் தலைமுடி வறட்சியுடனும், பாதிக்கப்படுவதை தடுக்க, தலைமுடிக்கு தேவையான அளவு நல்லெண்ணெய்யை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் நன்கு ஊறவைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு ஒருமுறை தலைமுடிக்கு நல்லெண்ணெய் மசாஜ் செய்து வந்தால், தலைமுடி  வறட்சியின்றி மென்மையாக இருக்கும்
 
நல்லெண்ணெய்யை ப்ரிட்ஜில் வைத்து குளிரசெய்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, கண்களின் மீது தடவ வேண்டும். இப்படி செய்தால், வீங்கிய கண்களின் வீக்கம் குறைவதோடு,  கருவளையங்களும் நீங்கிவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காராமணி குழம்பு செய்ய !!