Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெயிலினால் கருமையடைந்த சருமத்தை சரிசெய்யும் ரோஸ் வாட்டர் !!

வெயிலினால் கருமையடைந்த சருமத்தை சரிசெய்யும் ரோஸ் வாட்டர் !!
, வியாழன், 10 பிப்ரவரி 2022 (19:14 IST)
ரோஸ் வாட்டருடன், தக்காளி சாறு சேர்த்து கலந்து, அந்த கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், வெயிலினால் கருமையடைந்த சருமம் மீண்டும் பொலிவோடு மாறும்.


உங்கள் உதடு ரோஜாப்பூ போன்று மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்க வேண்டுமெனில், தினமும் ரோஸ் வாட்டரைக் கொண்டு உதட்டை துடைத்து எடுங்கள். இதனால் உதட்டில் உள்ள கருமை போய்விடும்.

வெந்தயத்தை அரைத்து அதில் ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலசினால், பொடுகுத் தொல்லை நீங்குவதுடன், முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

ஷாம்பு போட்டு தலையை அலசியப் பின்னர், ரோஸ் வாட்டர் பயன்படுத்தி தலையை மசாஜ் செய்தாலோ அல்லது ஷாம்புவுடன் ரோஸ் வாட்டரை சேர்த்துக் கொண்டாலோ, முடி பட்டுப் போன்று பொலிவாக காணப்படும்.

காட்டனில் ரோஸ் வாட்டரை நனைத்து, அதனை கண்களின் மேல் வைத்து 15 நிமிடம் ஊற வைத்து வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கருவளையங்கள் நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து, அத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து கொண்டு, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்குவதோடு, சுருக்கங்கள் வருவதும் தடுக்கப்படும்.

நல்ல வெள்ளையான சருமம் வேண்டுமா, அப்படியெனில் கடலை மாவு அல்லது முல்தானி மெட்டி அல்லது சந்தனப் பொடி, இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவகுணம் மிக்க மஞ்சள் என்னென்ன வியாதிகளை குணப்படுத்தும் தெரியுமா...?