Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அழகு பராமரிப்பில் நல்ல பலனை தரும் அரிசி கழுவிய தண்ணீர் !!

அழகு பராமரிப்பில் நல்ல பலனை தரும் அரிசி கழுவிய தண்ணீர் !!
அரிசி கழுவிய தண்ணீர் அழகு பராமரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரிசி கழுவிய தண்ணீரை வீணாக்காமல் கூந்தல் வளர்ச்சிக்கும், சருமத்தை அழகுபடுத்துவதற்கும் பயன்படுத்தலாம். 

அரிசி தண்ணீரை இனிக் கீழே ஊற்றாமல் பத்திரப்படுத்தி உங்கள் தலைமுடிக்கு மசாஜ் செய்து தலைக்குக் குளியுங்கள். இல்லையெனில் தலைக்குக் குளித்தபின்  இறுதி நீராக இந்த அரிசி தண்ணீரை ஊற்றி அலசலாம்.
 
அரிசி நீரைப் புளிக்கச் செய்து அதில் கொஞ்சம் நீர் கலந்து தலைக்குத் தேய்த்தாலும் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும். நீங்கள் தலைக்குக் குளித்தபின் இறுதியாக இந்த தண்ணீரை தலையில் ஊற்றி அலசினால் நல்ல பலன் கிடைக்கும். உங்களுக்கு தேவை என்றால் வாசனைக்கு அந்த நீரில் வாசனை எண்ணெய்  கலந்து கொள்ளலாம். 
 
கூந்தல் அதிக வறட்சியுடன் மென்மையின்றி இருந்தால், அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும். மேலும் முடியின் இயற்கை நிறமும் பாதுகாக்கப்படும். இந்நீரில் கார்போஹைட்ரேட்டுகளும், ஊட்டச்சத்துகளும் வளமாக நிறைந்துள்ளதால் இதனை குடிப்பதன் மூலம் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.
 
அரிசி தண்ணீர் பெற அரிசியை நன்றாக 2 முறை கழுவிக்கொள்ள வேண்டும், பின்னர் அரிசியை சுத்தமான நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, அந்த நீரை  வடிகட்டவேண்டும். 
 
பின்னர் அந்நீரால் முகத்தையும், கூந்தலையும் பராமரிக்கலாம். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமத்துளைகளும்  அடைக்கப்படும்.
 
அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைத்து, சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவோடும் இருக்கும். அதற்கு தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா முருங்கை இலை...!!