Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆவாரம் பூவை பயன்படுத்தி வறண்ட சருமத்திற்கு தீர்வு !!

Advertiesment
ஆவாரம் பூவை பயன்படுத்தி வறண்ட சருமத்திற்கு தீர்வு !!
எளிதில் கிடைக்க கூடிய ஆவாரம் பூவை பயன்படுத்தி இல்லத்தில் இருந்தவாறே வறண்ட சரும பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு காணலாம்.  

ஆவாரம் மொட்டு, இலை ஆகியவற்றை வெயிலில் காயவைத்து பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியுடன் பால் சேர்த்து கலந்து வறண்ட சருமத்தில் பூசி சுமார் 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் வறண்ட சருமம் சரியாகும். 
 
ஆவாரம் பொடி, கஸ்தூரி மஞ்சள், கசகசா ஆகியவற்றை நீரில் சேர்த்து கலந்து மேல் பூச்சாக பூசி சிறிது நேரம் கழித்து குளித்தால், வறண்ட சருமம் மாறும். தோல்  பளபளப்பாகும்.
 
ஆவாரம்பூ, பனங்கற்கண்டு, விளாமிச்சை ஆகியவற்றை கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வறண்ட சருமம்  மாறும். 
 
ஆவாரம் பூவுடன் வெள்ளரி விதை, கசகசா, பால் சேர்த்து உடலில் தேய்த்து உலர்ந்த பின் கடலைமாவைக் கொண்டு கழுவி வர உடலில் உள்ள வறட்சி நீங்கி மென்மையாகவும், பளிச்சென்றும் இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி சருமத்திற்கு பொலிவு சேர்க்க...!!