Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முடி உதிர்வதை தடுக்க உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள்....!!

முடி உதிர்வதை தடுக்க உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள்....!!
கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், கேரட், எலுமிச்சம்  பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.

கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.
 
வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக்கொள்ள வேண்டும்.  இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
 
வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊறவைக்கவேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில்  தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
 
சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும். சிலருக்கு முழுவதும்  நரையாகிவிடும்.

இதனை போக்க தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை  சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீரகத்தை எந்த முறையில் சாப்பிடுவதால் நன்மைகளை பெறமுடியும்...!!