Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சரும ஆரோக்கியத்திற்கு அழகு சேர்க்கும் கடலை மாவு !!

சரும ஆரோக்கியத்திற்கு அழகு சேர்க்கும் கடலை மாவு !!
அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. கடலைமாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும். கடலைமாவை உடல் முழுவதும் பூசி  குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம்.

கடலைமாவு, மஞ்சள்தூள். இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை.

ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலைமாவை  எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான  நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும்.
 
இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என்று இருக்கும்.
 
இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம்  கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும்.
 
கடலை பருப்பு 1 டீஸ்பூன். ஒரு மிளகு இவற்றை எடுத்த ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவையுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து  கலக்குங்கள். பிறகு இதை முகத்தில் பேக் ஆகப் போட்டு, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவேண்டும். பருக்கள் இருந்த படிப்படியாக மறைந்து போகும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரத்த சிவப்பணு உற்பத்திக்கு உதவும் ஆப்ரிகாட் !!