Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நோய்கள் ஓடிட....இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்

நோய்கள் ஓடிட....இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்
, வியாழன், 22 ஜூலை 2021 (00:25 IST)
சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இந்த ஐந்து பொருட்களையும் கஷாயம் செய்து பருகிவர கடுமையான சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
 
சுக்கு, வேப்பம்படடைட போட்டு கஷாயம் செய்து குடித்து வர ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
 
சுக்கு தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கி வர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய் துர்நாற்றம் விலகும்.
 
சுக்குடன் சிறிது நீர் தெளித்து விழுதாக அரைத்து நெற்றியில் தடவினால் தலைவலி வந்த வழியே போய்விடும்.
 
சுக்குடன் சிறிது வெந்தயம் சேர்த்து பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால் அலர்ஜி தொல்லை அகலும்.
 
சுக்குடன் சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.
 
சுக்குடன் சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்து சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.
 
சுக்கு, மிளகு, சீரகம் மூன்றையும் எண்ணெய்யில் இட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வர நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.
 
சுக்கு ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வயிற்றுப் புண்களுக்கு தீர்வு தரும் சீதாப்பழம்!