Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதில் தொடர்ச்சியாக இரைச்சலா? என்ன செய்ய வேண்டும்?

Advertiesment
காதில் தொடர்ச்சியாக இரைச்சலா? என்ன செய்ய வேண்டும்?

Mahendran

, வெள்ளி, 14 மார்ச் 2025 (19:16 IST)
சுமார் 15% மக்களுக்கு காதில் இரைச்சல் தரும் பிரச்சினை காணப்படுகிறது. இது ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அதிக ரத்த அழுத்தம், வயதுசென்று செவிக்கேட்பட்டல், கழுத்து மற்றும் தலை பகுதியில் ரத்தக்குழாய்களில் ஏற்படும் பிரச்சினைகள், காதில் மெழுகு அதிகமாக சேர்வது, வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகள், நரம்பு மண்டல கோளாறுகள், ஹைப்பர்தைராயிடிசம், ரத்தசோகை போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கலாம்.
 
மேலும், மன அழுத்தம், தூக்கமின்மை, அதிக சப்தம் உள்ள இடங்களில் நீண்ட நேரம் இருப்பது, போக்குவரத்து நெரிசல் போன்றவை காதிரைச்சலை அதிகப்படுத்தலாம். இதை அனுபவிக்கிறவர்களில் சிலருக்கு செவிக்கேட்கும் திறன் குறையும் பிரச்சினையும் இருக்கும்.
 
தவிர்க்க வேண்டியவை & பராமரிப்பு:
 
காதிற்குள் மருந்து சொட்டுகைகள் அல்லது வேறு பொருட்களை (குச்சி, பென்சில், பட்ஸ்) பயன்படுத்த வேண்டாம்.
 
அதிக சப்தம் உள்ள இடங்களில் 'இயர் ப்ளக்' (காது செருகிகள்) பயன்படுத்தலாம்.
டாக்டரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக எந்தவித சிகிச்சையும் மேற்கொள்ளக்கூடாது.
 
ரத்த பரிசோதனை, ஆடியோகிராம், ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மூலம் காரணம் கண்டறியலாம்.
 
பேச்சு சிகிச்சை, ஒலி சிகிச்சை, செவிக்கேட்பாட்டை மேம்படுத்தும் கருவிகள் பயன்படுத்தலாம்.
 
காதிரைச்சல் ஒரு நோயல்ல, ஆனால் இது உடலின் ஒரு கோளாறினால் ஏற்படுகிறது. இதை உண்மையான காரணத்தை கண்டறிந்து சரிசெய்தால், காதிரைச்சல் குறைந்து விடும்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள்: மருத்துவர்கள் எச்சரிக்கை..!