Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உடல் எடை குறைப்பிற்காக தனி ‘நலம்’ க்ளினிக்! எம்ஜிஎம் ஹெல்த்கேர் தொடங்கியது!

Advertiesment
MGM
, சனி, 31 மே 2025 (19:09 IST)

மருத்துவ ரீதியில் உடல் எடை குறைப்பிற்கு தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளுக்காக எம்ஜிஎம் ஹெல்த்கேர் தொடங்கியிருக்கும் ‘நலம்’ கிளினிக்

 

 

 

●       வளர்சிதை மாற்ற சீர்கேடுக்கான சிகிச்சை மற்றும் ஹார்மோன் ஆரோக்கியத்திற்கான நலம் கிளினிக்கை பிரபல திரைப்பட நடிகை திருமதி. குஷ்பு சுந்தர் தொடங்கி வைத்தார்.

 

●       உடலில் சேர்ந்துள்ள அளவுக்கதிக கொழுப்பையும், உடல் எடையையும் குறைப்பதற்கும் மற்றும் பல்வேறு தொற்றா நோய்களின் இடர்வாய்ப்பை தவிர்க்கவும் இத்தகைய நபர்கள் மேற்கொள்ளும் பயணத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் குழு ஒருங்கிணைந்து பயணிக்கும்.

 

 

 

தமிழ்நாட்டின் பிரபல மருத்துவமனையான எம்ஜிஎம் ஹெல்த்கேர், வளர்சிதை மாற்ற சீர்கேடுகளுக்கான சிகிச்சை மற்றும் ஹார்மோன் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான நோக்கத்தோடு நலம் என்ற பெயரிலான கிளினிக்கை தொடங்கியிருக்கிறது.  மருத்துவ சிகிச்சைப் பராமரிப்பு ஊட்டச்சத்திற்கான வழிகாட்டல், வாழ்க்கை முறை மாற்றங்களுக்கான இடையீடுகள், உளவியல் ரீதியிலான ஆலோசனை மற்றும் அறுவைசிகிச்சை விருப்பத்தேர்வுகள் ஆகியவற்றின் வழியாக சிறந்த பலன்களை வழங்கும் நோக்கத்தோடு, உடல்எடை குறைப்பிற்கு தனிப்பயனாக்கப்பட்ட தீர்வையும், ஆதரவையும் இந்த கிளினிக் வழங்கும்.  பல்வேறு துறைகளின் நிபுணர்களை உள்ளடக்கிய குழுவைக் கொண்டிருக்கும் இந்த கிளினிக், அறிவியல் ரீதியிலான மற்றும் முழுமையான அணுகுமுறையை கடைபிடிக்கும்.  தனிப்பட்ட நபர்களின் வளர்சிதை மாற்ற ஹார்மோன் சார்ந்த பண்பியல்புகளை மதிப்பாய்வு செய்ய மருத்துவ அறிவியலில் நவீன முன்னேற்றங்களை இது திறம்பட பயன்படுத்துவதுடன், சிறப்பான விளைவுகளுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் தொடர்ச்சியான ஆதரவையும் வழங்கும். 

 

 

 

எம்ஜிஎம் ஹெல்த்கேர் – ன் உயர் நிர்வாகக் குழுவினர் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் முன்னிலை வகித்த நிகழ்வில் திரைப்பட நடிகை திருமதி. குஷ்பூ சுந்தர் இந்த பிரத்யேக கிளினிக்கை தொடங்கி வைத்தார்.  உடலில் சேர்ந்திருக்கும் அளவுக்கு அதிகமான கொழுப்பைக் கரைக்கவும், இரத்த சர்க்கரை அளவுகளையும் மற்றும் கொலஸ்ட்ராலையும் சீராக்கி மேம்படுத்தவும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் மூன்று மாத கால உடல் மேலாண்மை செயல்திட்டம், நலம் கிளினிக் செயல்படுத்தவிருக்கும் சிகிச்சை திட்டங்களுள் முக்கியமானதாக இருக்கும்.  திறன்மிக்க சிறப்பு நிபுணர்களின் வழிகாட்டலுடன் மேற்கொள்ளப்படும் இச்செயல்திட்டம், சிகிச்சையின் பயனளிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய இரு அம்சங்களையும் உறுதிசெய்யும்.  நீண்டகாலம் நிலைத்து நிற்கும் வாழ்க்கைமுறை மாற்றங்களையும் ஊக்குவிக்கும் இச்செயல்திட்டம், அதிகரித்த உடல் எடையால் அவதிப்படும் நபர்களின் நீண்டகால ஆரோக்கிய இலக்குகளை அடைவதற்கு உதவும். 

 

 

 

எம்ஜிஎம் ஹெல்த் கேர் – ன் நிர்வாக இயக்குனர் டாக்டர். பிரசாத் ராஜகோபாலன் மற்றும் இயக்குனர் டாக்டர். உர்ஜிதா ராஜகோபாலன் இது தொடர்பாக கூறியதாவது: “அளவுக்கதிக உடல் எடையும், பருமனும் நாம் வாழும் இந்த காலகட்டத்தில் அதிக கவலை ஏற்படுத்தும் பொது சுகாதார பிரச்சனைகளுள் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது.  உலகளவில் வாழும் 8 நபர்களில் ஒருவர் இப்போது உடற்பருமன் பாதிப்புடன் வாழ்ந்து வருகிறார்.  இந்தியாவில் பெண்களில் 24% மற்றும் ஆண்களில் 23% மற்றும் குழந்தைகள் மற்றும் சிறார்களில் 8% அதிக உடல்எடை கொண்டவர்களாக அல்லது உடற்பருமன் பாதிப்பு உள்ளவர்களாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.  பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய இந்த பொது சுகாதார பிரச்சனையை எதிர்கொண்டு சமாளிக்க வளர்சிதை மாற்ற மதிப்பாய்வுகளால் வழிநடத்தப்படும் தனிப்பயனாக்கப்பட்ட உடல் மேலாண்மையும் மற்றும் உணவுமுறை அறிவியலில் ஒவ்வொரு நபருக்கும் ஏற்றவாறு தனித்துவமான கண்ணோட்டங்கள் நமக்குத் தேவைப்படுகின்றன.  எமது மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் நலம் கிளினிக் என்பது, இந்த குறிக்கோளை நோக்கிய பயணத்தில் ஒரு முன்னேற்ற நடவடிக்கையாகும். 

மருத்துவர்கள், உணவு முறை நிபுணர்கள், உளவியலாளர்கள், இயன்முறை சிகிச்சையாளர்கள் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் என பல்வேறு தரப்பினரையும் ஒரு குழுவாக இது ஒருங்கிணைக்கிறது.  இதன்மூலம் ஒரு விரிவான, முழுமையான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை திட்டத்தை உடற்பருமனால் அவதியுறும் நபர்களுக்கு வழங்குவதே இதன் நோக்கமாகும்.  அதைவிட முக்கியமாக, மருத்துவ ஆலோசனை வழங்குவதோடு, எமது பொறுப்புறுதியையும், செயல்பாட்டையும் நாங்கள் நிறுத்திக்கொள்ளப் போவதில்லை; நீடித்து நிலைக்கின்ற சிகிச்சை விளைவுகளை இந்நபர்கள் எட்டும் வரை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை உறுதியோடு கடைப்பிடிக்கிற வரை ஒவ்வொரு தனிநபரோடும் அவரது பயணத்தில் இணைந்து பயணிப்பது எமது நோக்கமாகவும், செயல்பாடாகவும் இருக்கும்.”

 

 

 

உள்ளார்ந்த மருத்துவத் துறையின் இயக்குனரும், முதுநிலை மருத்துவருமான டாக்டர். M. சாமிக்கண்ணு இது குறித்துப் பேசுகையில், “உடற்பருமன் என்பது, உடல்எடை அல்லது தோற்றம் தொடர்பான ஒரு விஷயம் மட்டுமல்ல; இதயநாள மற்றும் மூளைநாள நோய்கள், மிகை இரத்த அழுத்தம், வகை 2 நீரிழிவு மற்றும் குறிப்பிட்ட சில புற்றுநோய்கள் போன்ற கடுமையான தொற்றா நோய்கள் வருவதற்கான இடர்வாய்ப்பை உடற்பருமன் கணிசமாக அதிகரிக்கிறது.  உடல் எடையைக் குறைப்பதற்கு ஒரு தனிச்சிறப்பான, அறிவியல் அடிப்படையிலான, பயனுள்ள இலக்கை அடைவதற்கான ஒரு அணுகுமுறையை நலம் திட்டத்தின் மூலம் அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.  எமது செயல்திட்டமானது ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட ஒரு செயல்முறையைப் பின்பற்றுகிறது. 

சிகிச்சையின் தொடக்கத்திலிருந்தே பல்வேறு துறைகளின் நிபுணர்கள் அடங்கிய குழு இத்திட்டத்தில் ஈடுபாட்டுடன் செயலாற்றும்.  விரிவான வளர்சிதை மாற்ற மதிப்பீட்டிற்காகவும் மற்றும் பிரத்யேகமான மருந்தளிப்பை வழங்குவதற்காகவும் நாளமில்லா சுரப்பு மருத்துவரால் நோயாளிகள் மதிப்பாய்வு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.  அதைத் தொடர்ந்து, உணவு உண்ணல் பழக்கவழக்கங்கள் மற்றும் ஊட்டச்சத்து தேவைகள் தொடர்பான ஆலோசனைகளுக்கு உணவுமுறை நிபுணர்கள் உடனான அமர்வுகளில் அவர்கள் பங்கேற்பார்கள். இந்த நிபுணர்களின் பரிசோதனைகள் மற்றும் கண்ணோட்டங்களின் அடிப்படையில் நோயாளிகளுக்கான பிரத்யேக உணவு மற்றும் வாழ்க்கை முறை திட்டங்களை நாங்கள் உருவாக்குகிறோம்.  இத்தகைய நபர்களின் உடல்எடை மேலாண்மை பயணத்தில் உளவியல் நிபுணர்களும் ஒரு முக்கியப் பங்காற்றுவார்கள்.” என்று கூறினார். 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காளான்கள் எல்லா வகையிலும் உணவுக்கு ஏற்றவை அல்ல.. அதிர்ச்சி தகவல்..!