செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

Mahendran
சனி, 30 நவம்பர் 2024 (17:46 IST)
செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வர வாய்ப்பிருப்பதாக சமீபத்தில் அதிர்ச்சி கலந்த ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் அதிக நேரம் செலவிடுவதால் மன அழுத்தம் ஏற்பட்டு, அதன் காரணமாக முகப்பரு பிரச்சனை உருவாகும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மின்னணு சாதனங்கள் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், தேவையான நேரத்தில் மட்டுமே செல்போன் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செல்போன் பயன்படுத்துவதால் ஏற்கனவே கண்கள் மற்றும் காதுகளுக்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது முகப்பரு ஏற்படவும் செல்போனே காரணம் எனும் ஆய்வு அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முகப்பரு வராமல் இருக்க, எண்ணெய் பொறித்த உணவுகள் மற்றும் குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும். அதேசமயம், வைட்டமின் ஏ அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

தினசரி உடற்பயிற்சி, தியானம், நடைபயிற்சி போன்றவற்றில் ஈடுபடவும், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் பயன்பாட்டை குறைத்துக்கொண்டால், முகப்பரு வராமல் தடுக்கலாம் என கூறப்படுகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்களைப் பாதுகாக்க தினமும் செய்ய வேண்டிய அத்தியாவசியப் பழக்கங்கள்!

செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டால் மனநலமும் பாதிக்குமா?

கண்ணில் ரத்தக் கசிவு: நீரிழிவு, இரத்த அழுத்தம் காரணமா?

ஒல்லியானவர்களுக்கு கூட கொழுப்பு நிறைந்த கல்லீரல் ஏற்படுவது ஏன்?

உணவில் அடிக்கடி அவரைக்காய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments